என்னை பற்றி வரும் பொய் தகவல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம்


கொரானா வைரஸ் தாக்கத்தால் பொது மக்களும் , திரைத்துறையினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இன்றைய நிலையில் , சில தொலைக்காட்சி சேனல்கள் , பத்திரிகைகள் , மற்றும் சமூக வலைத் தளங்கள் என்னைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன . இந்த செய்திகளில் என் முனையளவும் உண்மையில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியீடுறேன் .
தமிழ்த் திரையுலகிற்க : தேசிய விருது உட்பட பல விருதுகளையும் , பல திறமையான நடிகர்களையும் , படைப்பாளிகளையும் , தொழில்றுப்பக் கலைஞர்களையும் தந்துள்ள எனது ' ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட மகாமுனி திரைப்படம் 2019 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06 - ம் தேதி ரிஃபீஸ் ஆனது . திரு நீதிமணி என்பவர் 2019 - மே மாதம் என்னை அணுக மகாமுனி திரைப்படத்தின் தமிழ்நாடு வியா விநியோக உரிமை தனக்கு வேண்டும் என்று கோரினார் . அவ்வகையில் 2019 - மே
27 ம் தேதி ரூ .6,25,00,000 ( ஆறுகோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாய் ) தொகைக்கு நீதிமணி அவர்களின் " Tarun Pictures ' நிறுவனத்திற்கு மகாமுனி திரைப்படத்தை விற்பனை செய்வதாக முறையான ஒப்பந்தம் போடப்பட்டது . நீதிமணி அவர்கள் பார் தொகையாக ரூ .2,30,00,000 இரண்டு கோடியே முப்பது இலட்சம் மட்டுமே செலுத்தினார் . மீதமுள்ள ரூ .3,05,00,000 மூன்று கோடியே தொன்றற்று இந்து இலட்சம் ) தொகையை பிறகு தருவதாக சொன்னவர் . இன்றுவரை தராமல் என்னை ஏமாற்றிவிட்டார் . மீதமுள்ள தொகையை தரவேண்டி நீதிமணி அவர்கள் மீது சினிமா துறையின் சட்டதிட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இந்நிலையில் திருந்திமணியும் அவரின் கூட்டாளிகளும் ரூ .3,00,00,000 ( மூன்று கோடி மோசடி செய்துவிட்டதாக திரு துளசி மணிகண்டன் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார் . என் மீதோ , ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மீதோ , எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை . ஒரு பொருளை வர்த்தகம் செய்யும் போது அதை வங்கும் நபர் என்ன செய்கிறார் , அவரின் பின்னணி என்ன என்பதை நாம் ஆராயச்சி செய்வதில்லை . சட்டப்படியான வியாபாரத்தை மட்டுமே போமுடியும் . அவ்வகையில் ' மகாமுளி திரைப்படத்தை சட்டப்படியாக முறையாக விற்பனை செய்ததைத் தவிர எனக்கும் நீர்மனிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை திருந்திமணி அவர்கள் மீது திரு துளசி மணிகண்டன் அவர்கள் அளித்துள்ள புகாரில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் என்னையும் , ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தையும் இணைத்து , என் புகைப்படத்தையும் பயன்படுத்தி நான் 2 மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி 300 கோடி ரூபாய் மோடி ' என உண்மைக்கு புறம்பான , மிகவும் தவறான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன . என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் ; தன்னிச்சையாகவும் , தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்திகளைப் பார்த்து நானும் , என் குடும்பத்தினரும் மிருந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளோம் . இது போன்ற செய்திகள் திரைத்துரையில் நாம் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயருக்கு ஊறு விளைப்பதோடு எமது எதிர்கால வியாபாரத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன . எனவே , இதுபோன்ற செய்திகளை என் அனுமதி பெறாமலும் , உண்மைக்குப் புறம்பாகவும் யாரும் வெளிய , வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . மேலும் ; இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது தொடர்ந்தால் அந்த செய்தியை வெளியிடுவோர் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்வதோடு மான நஷ்டாடு வழக்கும் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் . நன்றி .
தயாரிப்பாளர் கோ ஞானவேல்ராஜா
Block No. 140 , Door No.13 / 6 , 2nd Floor , Thanikalchalam Road , T Nagar , Chennai 600017 ,
Tel : 91-44-42037333 Email headoffice @ studiogreen in web www.sludiogroon.in

Comments